Thursday 24 March, 2011

கதவே, நன்றி!

நிச்சயமாய் நடத்திவிட வேண்டும்...
ஆம், நான் மட்டுமே செய்தால்தான்,
இனம்புரியாத அந்த இம்சையிலிருந்து விடுதலை.
நடத்திவிட வேண்டும் தான்!

உள்ளமும், உடலும் வேதனையடைய,
நிறுத்தப்பட்டேன் வாயிலில்.
அடைத்த கதவும், இரைத்த நீரும்...
முயற்சி கைகூடவில்லை தற்காலிகமாக.

வாய்ப்பு சிறிது நேரத்தில் கைகளில்!
கதவும் திறக்கப்பட்டது...
...
...
...
கழிவறையின் கதவே, நன்றி!

Thursday 17 March, 2011

வேகப்பெண்ணே!

திக்கு தெரியாத காட்டில், திணறி தவிக்கும் தென்றலே,
வர இருப்பதுவோ நல்வசந்தம்;
உன்னை நிச்சயம் வருடிக்கொண்டாடும் நேசத்துடன்
அரவணைக்கும்... காத்திரு!

துளிகளைத் துடைத்து தூக்கி எறிந்துவிடு,
வாட்டும் சொற்களும், வருத்தும் பார்வைகளும்,
கதற கதற, துச்சமாய்த் தூற வீசிவிடு,

சிறு பெண்ணே, இனி உன் கையில்,
ஆம், உன் கையில் மட்டும்தான்...
உண்மை! உன் மெய்!

வரிகளின் மூலம்: நடப்பவைகளினால் எரிச்சலுடன் விரக்திகொண்ட இளம்பெண்ணிற்காக...!

Tuesday 1 March, 2011

உயிர்வசந்தம்

மல்லிகைப் பாதங்கள், பிஞ்சுவிரல்கள்,
உணர்ச்சி வேகம் துடிக்கும் 'பச்சிளம்' மனங்கள்...
உள்ளத்தினை உறுதிஉளியாக, உயிர்வசந்தக் குதிரையைக்
ஒழுக்கக் கடிவாளம்கொண்டு தூரசெலுத்தி வெல்ல...
கைகுலுக்கி, வாழ்த்தி, உச்சிமுகர்ந்து உவகைகொள்ள ஆசை!!

வரிகளின் மூலம்:முந்தைய வலைப்பூவின் சூழல்