Wednesday 14 March, 2012

'நாகர'த்தில் பொறிக்கணும், ஹை... நானும் அப்பா!

நாடி உயர்த்தி விரைப்பாய்,
...நான் கழித்த காலங்கள், உனை
நாடி வந்து உரையாடி, 

...நாம் கழித்த மணித்துளிகள், நம்
நாடி ஜோதிடர் கூற்றுபற்றி குறித்த,

...நாளில் கழித்த முகூர்த்த நொடிகள், உன்
நாடி பார்த்து மருத்துவர் சொன்னதைக் கேட்டு, 

...நாசூக்காய் குதித்துக்கழித்த சந்தோஷ பொழுதுகள், மீண்டும்
நாடி துருத்தி
ப் பார்த்த நம் மழலை விரல் பற்றியதும், உருகி
...நாபிக்கமலத்தினின்று கழிக்கும் குதூகலத் தருணங்கள், தருணங்கள்!

கரண்ட்டு கம்பி

தெனைக்கும் கொஞ்சம் தூக்கிக் கொடுத்த
நெல்லுக்கு முக்கி முக்கி
களையெடுத்த கட்ட பிடிச்ச காட்டுல, இன்னுமும்
பாதங்கடுக்கற கெட்டி மண்ணு கேக்குதுவோ?

"தைவரைக்கும் முக்காவாசி நெல்லத்தான்,
முழுசா தூக்கி கொடுத்தவ! பங்குனில சுடு வெயில்ல இப்போ,

அள்ளிக்காம கிள்ளிக் கொடுத்து வயித்தக்
கழுவ வழி கொடுப்பா நம்ம கடலயின்னு
நொந்து நோகாம வெதச்சு வச்சா,
பீஸப்புடுங்கி சேத்து வைக்கேம்முன்னு,
கெளம்பி வந்த கூவைங்கள,

கண்ணுக்கே காட்டாதவ, பகப்பொழுதும் வார்ற இருட்டுக்குள்ள,
கருகிப்போன காட்டப்பாக்க, மனசு வெந்து ஒடம்பும் வெந்து,
பொம்பளங்க புள்ளங்கள, பசிக்கழுதத பாத்து பாத்து,
கண்ணீருல சீவன் வத்தி, கசங்குறியா பழி மனசே?"

என்னமோ போவேன்னுட்டு வீம்பா நின்னாலும்,
நம்ம மண்ணு கேட்டதுக்கு,
பதிலத்தான் தேடிக்கிட்டு கெடக்கேன்!...
ஏளா, அது எங்கையாச்சும் கெடைக்குமா?

Tuesday 13 March, 2012

மொகங்காட்டும் கண்ணாடி

இரு வெடல மனசுங்க,
தெவங்கித்தெவங்கி ஓடுதுங்க!
வாக்கப்பட ஆசப்பட,
வயசின்னுமும் வரலயன்னு;
சொல்லாம சொல்லிப்புடும்,  ஆமாம்!,
இந்த சீரான காலமொகம்!