பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்தேன்
உடல் வேர்த்துக் கரைந்து அலைந்தேன்;
நிழல் கழன்று மரணித்த பின்பும்
நிலை கொள்ள எத்தணித்தேன்;
பசி தூக்கம் விலகிச்சென்றும்,
உயிர் பிடித்து உயரப்பறந்தேன்.
பலகாலம் உருண்ட பின்பு,
கடந்ததெல்லாம் காரணமாத்தா னென
ஐயங்கொண்டு தூசுதட்டி திருப்பிப் பார்த்தேன்;
தட்டிய தூசா, விலக்கிய பார்வையா?
கண்ணெதிரே வெறும் புகைமண்டலம்
உற்று உணர்ந்தால்; ஆம், அது விண்ணுலகம்.
நரகமா? சொர்க்கமா? மீண்டும் ஐயம்...
உடல் வேர்த்துக் கரைந்து அலைந்தேன்;
நிழல் கழன்று மரணித்த பின்பும்
நிலை கொள்ள எத்தணித்தேன்;
பசி தூக்கம் விலகிச்சென்றும்,
உயிர் பிடித்து உயரப்பறந்தேன்.
பலகாலம் உருண்ட பின்பு,
கடந்ததெல்லாம் காரணமாத்தா னென
ஐயங்கொண்டு தூசுதட்டி திருப்பிப் பார்த்தேன்;
தட்டிய தூசா, விலக்கிய பார்வையா?
கண்ணெதிரே வெறும் புகைமண்டலம்
உற்று உணர்ந்தால்; ஆம், அது விண்ணுலகம்.
நரகமா? சொர்க்கமா? மீண்டும் ஐயம்...