Thursday 25 August, 2011

வணக்கம் தேவசுரா!

பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்தேன்
உடல் வேர்த்துக் கரைந்து அலைந்தேன்;

நிழல் கழன்று மரணித்த பின்பும்
நிலை கொள்ள எத்தணித்தேன்;

பசி தூக்கம் விலகிச்சென்றும்,
உயிர் பிடித்து உயரப்பறந்தேன்.

பலகாலம் உருண்ட பின்பு,
கடந்ததெல்லாம் காரணமாத்தா னென
ஐயங்கொண்டு தூசுதட்டி திருப்பிப் பார்த்தேன்;

தட்டிய தூசா, விலக்கிய பார்வையா?
கண்ணெதிரே வெறும் புகைமண்டலம்
உற்று உணர்ந்தால்; ஆம், அது விண்ணுலகம்.
நரகமா? சொர்க்கமா? மீண்டும் ஐயம்...

Saturday 13 August, 2011

நிகழ்வை விட்டு.

அழகாய் மணமாய்  என் தோட்டத்தின்,
வசந்தமென பல முள்ரோஜா மலர்கள்;
கொலைக்கும் மேலாய் கொடுஞ்செய்கை யதுவென
முத்துக்கள் சிதறி உறுதி கூறினவையே!

பதினாறின் அதிகமாய் செல்வங்கள் இருந்தும்
பட்டெனவே செய்யத் தூண்டியதும் என்னவென
வருந்தும் மகிழ்ந்தும் வரும் ஒவ்வொரு,
மறுதினமும் நேற்றேனவே மாறியதும் மெய்யே!

வரிகளின் மூலம்: நியாயத்தை விரும்பும் மனமொன்று லஞ்சம் வாங்கியதை நினைத்து வருந்திய தருணம்

Friday 12 August, 2011

இன்னபிற...

கனத்தது முதிர்சடலம்;
வலித்தது பிள்ளைமனம்!
கனத்தது பால்தேகம்;
பூரித்தது பெற்றமனம்!
மறைதலும் தோன்றலும்,
இறப்பும் பிறப்புமாய்
ஆனதுவே!இதில்
மாக்களாய் மாறி,
மக்களின் துண்டங்கள்
தோன்றுவதும் நியாயமோ?
தூண்டப்படுவதுவும் ஞானமோ?

Tuesday 9 August, 2011

நல்நீதி அம்மனே!

குயில்குரலாள்;
சிரத்திலூன்றிய கருங்கார் கூந்தலாள்;

அடியாறில் உச்சி தொட்ட மாயை உருவத்தாள்;
வதனத்திலகம் உணர்வுமிழும் மென்னுக்கிரத் தோற்றத்தாள்;
விழியுருளம்கண் நாடியமர்ந்த
உருச்செதுக்கி கொண்டவளாம் மங்கையவள்,
அறிவுருகித்தங்கன் னங்கள்தமை
உவர்நீரில் நனையச் செய்தவளவள்;

தருணங்களின் தனிமையை தன்வயப்படுத்திய
சங்கதிகள் சிலவும் உதிர்க்க,
தொன்மை தொக்கி நிற்க; அகம்,
மையமதில் அழுத்திப் பார்க்க;
முன்வாய் பல்பதினாறும் முத்திரை நகையுதிர்க்க,
இனிமையாய் பெற்ற விடை மிக நன்று, நன்றே!

Monday 8 August, 2011

அகற்றல் விருப்பம் வசம்.

மூன் றேழு உருமாறி,
முதிர்ச்சியென வேடம் தரித்து,
நாவால்நன் சொல்பல நவிழ்ந்து,
பின்தங்கி, ஒவ்வாத தோழமை
நினைந் தழன்று, நீரால்
கண்ணிறைத்து, அதன் விலகிப்
பருவமே போற்றி, மெய்யுணர்ந்து
நிலை தெளிந்து நகைத்த
நல் நங்கையே, நீ வாழியவே!

Thursday 4 August, 2011

எளம மனசு...

அவனக்கேளு, இவளக்கேளுன்னு,
அம்பது வருஷமும் ஓடிப்போச்சு,
எழுவது வயசுல கண்ணு ரெண்டும்
அரக்கா பார்வேல அவிஞ்சு போச்சு

குடுத்தா முடுஞ்சுறும்னு, கைநெறைய வேலையெல்லாம்
நம்பிக் கொடுத்தவுக, மனசு கோண செய்யறது,
பொறப்பெடுத்து வளந்து வந்த வம்சத்துக்கும் ஆகாதுன்ட்டு,

ஓடி ஆட முடியாம, ஒடம்பு பூரா தேஞ்சாலும்,
ஒத்த ஆளா நின்னு பாக்க, பொயக்காத்தே அடிச்சாலும்,

மனசுல எளம இன்னும் நெறஞ்சு கிடக்கு. வாரும் ஒரு கை பாத்துரலாம்!

குனிவித்த பனை

குறுக்கும் நெடுக்குமாய் வெடித்த வரப்பு!
கடந்து சென்றால்,
வறண்ட வயக்காட்டின் ஒரத்தில்,
உயர்ந்து நிமிர்ந்து நிற்கும், ஒற்றை பனை மரம்!

சற்றே குனிந்து விலகினேன்.
மரமே, நீர் இன்றி யாம் இல்லை,
ஆனால் நீர் மட்டும் எப்படி,
நீர் இன்றி நெடு நாட்களாய், நெடு நெடுவென...?