Wednesday 29 May, 2013

மறைகின்ற தோற்றங்கள்!

விளம்பரங்களின் கவர்ச்சிகள்,
வியாபாரத்தின் மகிழ்ச்சிகள்,
மனங்களின் குழப்பங்கள்,
மனிதர்களின் இழப்புகள்!

நிறைகின்ற வங்கிக்கணக்குகள்,
உயர்கின்ற கட்டிடங்கள்,
வளர்கின்ற குறுங்கூட்டுகள்,
குறைகின்ற பந்தங்கள்!

பொய்க்கின்ற மழைமேகங்கள்,
காய்கின்ற வயல்வெளிகள்,
வீழ்கின்ற விவசாயிகள்,
வீணாகும் வாழ்க்கைகள்!



Saturday 25 May, 2013

வெறுங்காயம்

வீரம்வெளஞ்ச மண்ணுட்டுதான
கொதரக்கொதர கத்தலையோ?
யாருக்குமே தரமாட்டேன்னுதான
யார்கேட்டும் தரலையோ?

எல்லாமும் முடிஞ்சப்புரம்
எவனுக்கு எதுகெடைக்கும்?
செல்லாத காசப்போல,
சீவனுக்கு ஆகாரம்!



தேடல் நண்டு

கடற்கரை ஓரமா மெதுவா,
அழகா ஒரு 'வாக்கிங்'!
கூர்மயா கீழ பாத்தா,
சூட்டிப்பா ஒருமினி 'ரன்னிங்'!

'அடேங்கப்பா'ன்ட்டு உச் கொட்ட,
டக்குன்னு ஒரு 'ஹைடிங்'!
புது அலையில மறையுற,
வளைங்களுக்குள்ள ஒருவழி 'ஸேர்ச்சிங்'!

மறுசொல் மரணம்

முவ்வுட லேற்கவியலா முழுப்பந்த மில்லையென,
முக்கிமுக்கி பறைசாற்றும் முதுமனங்கள் நீவிர் வாழ,

மூத்தகுழு மான்பின்றி  பிரண்டதென நன்றுரைத்து,
சீத்தகுழு போன்றெனவே  இளையகுழு சுருக்குதென,

வேற்றுமைக்கண் கொள்ளவே வலியோடு ஈனப்பட்டு,
சேற்றுடனேதன் மொத்தமும் பிணியோடு ஏற்றப்பட்டு, 

தன் மனங்கழன்று செருக்கேற்றி குழப்பிக்குறுகி நினைந்து நோக்கி,
பொன் வழக்கழிய மெருகேற்றி சலம்பிசலம்பி விரைந்து மக்கி,

சூத்திரமுரைத்த ஏற்கவொவ்வா,
ஆத்திரமுடைந்த வேர்க்கையில்லா,

நாளும் நாளும் கடந்து போக,
நீளும் நீளும் நாவும் சாகும்!

Sunday 12 May, 2013

ஏக்கவணக்கம்!

துருவித்துருவித் தேடுகிறேன்,
இவ்விடம் நெருக்கும் அடுக்கக தங்கல்களில்,
நான் கண்டு தொலைகின்ற இனிமைவாழ்வுதனை!

உருமித்திமிறி கதறுகிறேன்!
எம்மகன் தொடுக்கும் சுளீரென்ற வினாக்களில்,
அவன் கண்டு கரைகின்ற குழந்தைத்தனத்தினை!

யாம் திளைத்து வளர்ந்த வயல் வரப்பும்,
மாட்டுவண்டியும், வைக்கப்போர் விளையாட்டும்,
அது கொடுக்கும் அரிப்பும்,
நீர் திரண்டோடும் நதிக்கரை விளையாட்டும்,

மண்டையைப் பதம்பார்க்கும் அருவிக்குளியலும்,
ஆலம்விழுது ஆட்டமும், சுடுகொட்டையும்,
அது பொக்கும் வலியும்,
கோலி சோடாவும், தாத்தாக்கடை இஞ்சி மரப்பாவும்

இன்னும் வாழச்செய்த பலவும்,
இனி கானல் நீரின் தடங்களாய் மட்டும்,
அவனுக்கு கற்பனை கொடுக்கும் அத்தியாயங்கள்!

சோட்டாபீமும், டோரேமானும்,
நிரந்தர நண்பர்களாய்
ஏற்றுக்கொண்டு வாழத்தொடங்கி,

ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்
முவ்வேளை உணவுகளாய்
ஏற்றுக்கொண்டு புசிக்கத்தொடங்கி,

அவனும், போன்ற இன்னபிற பிராயத்தினரும்
மனிதம் மறந்து, இயந்திரம் ஏற்று,
வேகத்திற்குள் மெதுவாய்க் கரைவதற்கு,
கடுமையாய் முயற்சிக்கும், எம்போன்ற பெற்றோர்களுக்கு,
சகவணக்கம்!!

Sunday 5 May, 2013

தீ செண்டிமென்ட்

எம் முக்கிரகங்கள் வரவேற்க, ஜுவாலை கொடுத்தாய்!
எம் மனங்களினைந்த நாள்முதலாய், வயிறு நிறைத்தாய்!

மாற்றலுக்காய் வண்ணத்துப் பூச்சிவாரிசினை, நின் சேவை
ஊற்றினைக்கை வண்ணங்க ளூற்றிவாரிபிணைத் தில்தேவை
நிறைக்க விட்டுச்செல்லும் சூரியா ஐகானே!

விழிபணிந்த நன்றியோடு நவில்கிறேன்,
எத்துணையுரைத்தாலும் ஈடில்லா  பல நன்றிகளை!
வாழிய நீ வாழியவே!