Wednesday 26 October, 2011

பொறிகள்

தலைக்கனமாய் குச்சிகளும்,
பொறி பறக்கும் கம்பிகளும்
உலகிற்கே உருவாக்க சிதைக்கப்படும் வாழ்வுகள்,
கந்தகம் எட்டிப்பார்க்கும் சுவாசக்குழாய்கள்,
விஷச் சாயமேரிய விரல்கள்!

பசி வயிறை காரணமாய்க் காட்டி,
வயிறெரிந்து வாழ்த்து பகிரவா?...
சிறுவனே!
நின் சாபம் பொல்லாதது!
இருந்தும், அது சிறுவனுடையதாயிற்றே!

மனங்குறுகி மற்றோரின் சிரிப்பில்
மகிழ்ச்சிகொண்டதாய்க் காட்டிக்கொள்ள,
கபடமில்லா தெய்வத்தின் அச்சாய்,
நின் சொற்களைக் கொள்ள,
மனமே நடிக்கத் தொடர்வாய்!