Saturday 26 October, 2019

நீர்த்த நீதி

இல்லையென்றே னில்லை யென்பராம்,
இவரவர் உரைத்ததே 
மெய்யு மென்பராம்,

நீதியாம் உண்மையாம்,
சொல்வதுவும் கேட்பதும் 
மதிகெட்ட பெண்ணாகினால்,
உயிர்க்கூசா புளுவலும், 
தொடர்ந்தே சாத்தியமாம்,

ஏண்டுகொள்ளெனவே குழுவாய்க் கூறி
'பின்வந்தி'ன் சாரணைக்கு ஒத்தூதும்
ஒருகைப்பிடி சாரணமார் சேர்ந்ததுவாம்,
பலதிங்கள் மனத்திற்குள், 
மாறா அழுத்தம் ஏற்றினராம்,
மீண்டும் மீண்டும் பிண்டமாய் 
மாற்றும் வழியனைத்தும், 
நிற்காமல் வழங்கினராம்!

மதிமக்கி மெய்வருந்தி, 
இரவு- பகலாகி, பகல்- விடியலாகி, 
சுழலும் சக்கரம் வயதைத் தடிமனாக்கி,
உட்சக்தி வற்றி புள்ளிமட்டும் 
தேடித் தேடி...

Thursday 24 October, 2019

ச்...இவன்

ம்ச்...
இவன் ...
ஓர் நல்லவனாம்!

ம்ச்...
இவன்
கருணையில் இதயம் 
ச்...சிவந்தனனாம்! 

அளப்பரிய அன்பை,
அள்ளித் தெளித்து 

நம் கண்கள் குளமாக்கிக்
குடி கன்னந்தடிச் சிவன்,

அப்பனாய் நின்று 
நாடகம் நடத்திட்டு,

அண்டத்தின் சுடராய் 
ஒளிருஞ் சிவனிவனாம்.