Thursday 18 April, 2013

போரில் இழந்த புனிதம்!

இரு வயதில் கிடைத்த,
பெருத்த ஓர் உபதேசம்,
இடக்கை அபசகுனம்;
வலக்கை மிகப்புனிதம்!

ரெஸ்ட் ராண்ட்டில், பக்கத்து நாற்காலி
நண்பர் ஜெனரல், இடதுகை ஸ்பூனில்
உணவு உண்ணுகிறார்..
போரில் இழந்த புனிதம்!...

இந்த சகுனங்களெல்லாம், கொடூர
அபசகுனங்களாய் கண்முண்ணே!


செந்தி-டமணி

குலமோங்க, இடர்மெய்
நலமோங்க நிலைமனப்
பலமோங்க, நன்செய்
செழிப்போங்க நின்சொல்
அடப்போங்க ண்ணே.. சும்மா விளையாடி கிட்டு... ஹி ஹி ஹி!

Thursday 11 April, 2013

கலைநட்பு

பத்தாய்க் கழிந்த நவமும், அறு
வெட்டாய்க் கழிந்த இரண்டும், இசைக்
கற்றாய் ஒளிரும் நாமமும்,  பலி
யிட்டால் மறையா மெய்யும், எனை

சுட்டால் மாறா மனமும், நமை
நட்டால் துளிரும் பதமும், நீர்
சொட்டால் நிறையும் விழியுமென, நான்
முட்டாள் மனமென விம்மி, பூமித்

தட்டால் தாங்கிய நாளில், சொல்
கற்றால் நீவாழ நினைந்தும், எனை
உற்றாள் வருந்து மெனவே, நா
நிற்றான் என்முன் னேயே! 

இறை

வெட்டிச்சிகரமே, அதர்மத்தை உதிர்க்க விழை!
நட்புக்களங்கமே, நியாயத்தை உமிழ நினை! தீ
மூட்டிய கருகலே, சாம்பலை தூவிக் களை! மெய்
காட்டி நீ அருகிலே, தெய்வத்தை திணித் தடை!

புத்துணர்வு மழலை

உரைக்க வைத்த நகைப்புகளுக்குள் புதைந்திருந்தன,
ஓராயிரம் முறைகளில் முகமூடியுரிக்கும் யுக்திகள்!

கனத்த தொண்டையை, நொண்டிக் கொண்டே
உரத்த குரத்தலில், சில ஆயிர டெசிபல்களை
காற்றிலுதிர்ந்து கலக்க விட்டிருந்தேனென
சுய நல மிதப்பில் மிதந்திருந்த மனதை...

உரைக்க வைத்த நகைப்புகளுக்குள் புதைந்திருந்தன,
ஓராயிரம் முறைகளில் முகமூடியுரிக்கும் யுக்திகள்!

Friday 5 April, 2013

நடக்காதென்பர்...

ஒட்டா கூட்டாய்,
ஓடிப்பிடித்து விளையாடி,
எட்டா சிட்டாய்,
ஏறிமிதித்து சொரம்பாடி,

உனை நிந்திக்க, என்னுள்
உணர்வுருளும், தருணம்
எனை நிந்திக்க, அவனுள்
தளரிருளும் கரணம்!

ஊர்தியுருளாய் நெருங்க இன்றே,
தீர்ந்தமனமாய் நகர வந்தே,
சொர்க்க நிலமாய் நிகழ்ந்த விங்கே,
சோர்ந்த சுருளாய் கரைந்த தடமே!

வரிகள் மூலம்:
கலைந்த கனவுகளுக்குள் கனவு காணும், அவசரகால ஆளும் மனம்