Friday 11 May, 2012

ஷோகேஸ் குழந்தைகளே வாருங்கள்!

விடிய விடிய விழித்துப் பழகிய கண்கள்,
தூக்கம் மறந்து பழக்கம் விரட்டிய மூளை,
ஒற்றை விரலில் நடக்க நினைத்த கனவுகள்,
விரலைக் கூட வெட்டிய கவனக் குறைவுகள்,
... ஷோகேஸ்...

பாங்காய்ப் பார்த்த காலம் கடந்து பின்பார்க்க,
வருடம் இரண்டு கடந்து வந்து முன் தேய,
ஒருவரிடமும் இல்லா மாற்றம் வர நினைக்க,
என்னமோப்போவென மீண்டும் விழையும் அரக்க பரக்க...
... ஷோகேஸ்...

வரிகளின் மூலம்: விழித்திருந்து பணிக்காக் பணி செய்யும் குழந்தைகளை நினைத்து...

Wednesday 9 May, 2012

நீர் மறைத்த நீதியா?!

நீரிறைத்து நிறைந்து மறைத்து,
நின்ற நின் பார்வை,
எனதருமை நல்நீதி அம்மனே...

உன் பெருங்காதணிகளுக்கிடையில் குறுகிய,
அப்பார்வை மறைத்த கண்ணீரின் அவசியம்,

நின் கூற்றாய் வந்த அகவுள்ளில்லா
சரிநிலையன்றி வேறொன்றுமில்லை எனவே,
என் உள்நிலை குறுவகத்தில்,
தான் தோன்றி வேண்டி... கேட்டு வேகிறேன்! வளர்மனமே!

வரிகள் மூலம்: பாங்காய் படமெடுக்கும்  எம் நல்நீதி அம்மனின் ஓர்நிலை உருவகம்.

Monday 7 May, 2012

புன்னகைகள்...

பீறிட்டெழுவதா என் புன்னகை?
கொட்டினேன் அடக்குமுறையை!
ம்! ஆம்..., சிறிதாயுமிழ்ந்து நம்
நட்புக்கவர்ச்சியைத் தொடங்கினேன்!

காத்திருந்துதான் பார்ப்போமே,
உருண்டுவந்த வாகனத்தில்,
மென்மையாய் நின்ற உன் உருவம்,
அறைந்ததே என் பட்டினிக்காதலை!

நளின நங்கையே உன்,
ஓரக்கண்ணும் கடைக்கண்ணுமாய்;
என் முன், மின்னல் வெட்டிப்பின்,
பின் சென்ற தருணங்கள் பல!

தாத்தாவிற்குப் பேத்தியென நினைத்த உன்னை,
தந்தைக்குப் பெண்ணென உரைத்ததைக்கேட்டு,
சற்றே அதிர்ந்து சுதாரித்துக்கடந்த;
கடத்திய நொடிகள் மறக்க...

நாள்தோறும் நவில்வதற்கு;
நயமாய் பழகிப் பத்திரமாய்,
பதப்படுத்திப் பரவலாய்,
பொழிகிறேனே...,
இனி என் புன்னகைகளை!