Thursday 1 December, 2011

மீண்டும் உருளும் தடாக க்ளக்குகள்!

சோகக் குடைச்சலாடும் மனம்;
குவிந்து கனிந்து சிவந்த விழிகள்;
தேர்வு, தந்தை, தாய், தனிமை...இயல்பில் துவள்ந்து,
முக்கனியாம் வாழை, பலா, மா...
தவிடாய் மாறி, மாறி சுவைகுறைந்து குத்தும்,

சோகக் குடைச்சலாடும் மனம்;
நகரா கீழ்விழி தடித்துக் காட்டும்;
மாய உருவம் உருகுவது நியாயமோ... மெய்யில் தர்மமோ?!
மனங்குதித்து, தளிர்விடும் நிலையில்,
நினைந்துரைத்து ஆட்கொள்ளும் எம் நல்நீதிஅம்மனே,
நின் மனம்நினைக்கும் கள்ளமற்ற மனம் வாழ்க! அந்தி வரும்,

சோகக் குடைச்சலாடும் மனம்;
இனி இதைப்போன்றனவைகளனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு,
நின் ஏரி உயர்ந்து இறங்க, இறங்கா மனமும் தோழமைகளும்,
எளியதாய் மாற்ற, இந்நிலையைத் துடித்தெறிந்து பறக்கவிட்டுவிட்டு,
கரை கடந்துருண்டு குதித்து வந்து அருள் செய்வாய்!



வரிகள் மூலம்: எதிர்பாரா குடும்பச் சிக்கலில் அழலும் ஓர் அந்தி விடலைப்பருவப் பெண்ணின், ஓர் சூழல்!