Wednesday 27 February, 2013

வாழ்க மனிதம்!

அடிக்கடி வரும் பசிக்கு, அகங்காரக் கடைகள்!
அயல்நாட்டு கலாசாரமாம் இந்த அங்காடித்தெருத் தொழில் முத்திரைகள்!

வாடிவதங்கி சுருங்கிக் கருகிப்போன வயிறுகள்;
கன்னடொக்கும் கருப்புக்கண்களுமாய் துவண்டுநொடிந்த தேகங்கள்!

வயிரெறிந்து வாழ்த்துகிறேன்!
வழக்கொழிய வாழ்த்துகிறேன்!

இம்மண்ணைக் கொலைசெய்யும் மனதுகள்,
தம்மனங்களை அலசிப்பார்க்க வாழ்த்துகிறேன்!

இம்மண்ணின் மானுடமே,
திரும்பிப்பார்க்க!

நிற்க!
வாழ்க மனிதம்!

சீ போ, ம'ன'தா!

நான் மரணிக்க மறுக்கிறேன்!
"போடா பொய்யா!", என்கிறதென் மனது!

வார்த்தைகள் சேரும்போது,
என்னை நான் குறிப்பிட விழையவில்லை!

ஆனால் ஆதியில் உதித்த நானோ,
"இல்லை, இல்லை" என்றரற்றுகிறேனோ?!

வரிகள் மூலம்: துறவு ஏற்க நினைத்துப் பின் குழம்பிய நிலை?!

Tuesday 5 February, 2013

(பெருங்)காயம்


குழப்ப நிலையில், மனிதம் இறக்கும்;
தாயா? மகளா?, உருவம் தெறிக்கும்;
தெய்வ வாசல்தான் அமைதியோவென
பொய்த்த கனம்நினைத்து,
எனைத் துருவியெடுக்கும்?!

வந்தாய் நின்றாய் நடந்தாய்; சொற்கள்
உதிர்த்தாய் கோர்த்தாய் எறிந்தாய்; கற்கள்
மழையாய் ஈட்டியாய் சாட்டையாய்,
பொழியப் பொழிய!!...

நன்றி, நன்றி!
தோலும் எலும்பும் இம்மியேனும் கிழியாமல்;
இதயம் மட்டும் குதறப்பட்ட மாயம்தனை கற்பித்தமைக்கு!

உன் மெய்க்காதலனாய் இன்றி,  உண்மைக்காதலனாய்,  நன்றி!