போர்கொண்டு அடித்தொழிக்க,
வீரமுண்டு நெஞ்சில்,
பார்கொண்ட இடிமுழங்க,
நீயுமுண்டு நாட்டில்!
மேற்கூற்றின் மெய்யாய்,
நம்பி நழுவிய கனங்கள்,
முதுமையூற்றின் மெய்யாய்,
வெம்பி விலகிய பொய்கள்!
காயங்கொண்டு வந்தோருக்கு,
ஆற்றுமுதிரம் தந்து,
மாற்றுவழி ஏதுமின்றி,
காயம்விட்டுக் கழண்டாயோ?
நூற்றாண்டு காண,
மூவாண்டுகளின் மிச்சம்,
வற்றாது போன,
நின்நினைவுகளின் எச்சம்!
வீரமுண்டு நெஞ்சில்,
பார்கொண்ட இடிமுழங்க,
நீயுமுண்டு நாட்டில்!
மேற்கூற்றின் மெய்யாய்,
நம்பி நழுவிய கனங்கள்,
முதுமையூற்றின் மெய்யாய்,
வெம்பி விலகிய பொய்கள்!
காயங்கொண்டு வந்தோருக்கு,
ஆற்றுமுதிரம் தந்து,
மாற்றுவழி ஏதுமின்றி,
காயம்விட்டுக் கழண்டாயோ?
நூற்றாண்டு காண,
மூவாண்டுகளின் மிச்சம்,
வற்றாது போன,
நின்நினைவுகளின் எச்சம்!