Monday 23 July, 2012

லட்சுமி செகல் மருத்துவர்

போர்கொண்டு அடித்தொழிக்க,
வீரமுண்டு நெஞ்சில்,
பார்கொண்ட இடிமுழங்க,
நீயுமுண்டு நாட்டில்!

மேற்கூற்றின் மெய்யாய்,
நம்பி நழுவிய கனங்கள்,
முதுமையூற்றின் மெய்யாய்,
வெம்பி விலகிய பொய்கள்!

காயங்கொண்டு வந்தோருக்கு,
ஆற்றுமுதிரம் தந்து,
மாற்றுவழி ஏதுமின்றி,
காயம்விட்டுக் கழண்டாயோ?

நூற்றாண்டு காண,
மூவாண்டுகளின் மிச்சம்,
வற்றாது போன,
நின்நினைவுகளின் எச்சம்!

Monday 16 July, 2012

மறுபொழுது

இயலொளி இறந்து மீண்டும் பிறக்கும்,
அமணி காலம் இமைகூடி இறக்கும்,
முப்பொழுதும் மெய்க்கு ஆகாரம் இறைக்கும்,
விந்தையொக்கும் சுழலில் மறுவட்டம் தொடங்கும்!

Monday 9 July, 2012

கசாப்புக்கடை தெய்வங்கள்

தோல்துகிலுறித்து சிரமின்றி
சிரசாசனம் செய்யும் ஆடவியலா ஆடே!
உன் துணை சற்று தொலைவில்
ஓர் அன்னியம்!

'ஆடுகள'மில்லா  பேடியொடுங்கி
சிலிர்ப்பதுவது ஒன்றே, வேறு!
இனிக்கொன்றபின்தான் அதன்
தோல்துகிலுரியும் அத்தியாயம் நடந்தேறும்!

முன்னரே அதற்கும் சிரசாசனப்பயணம்,
மிதிவண்டியிலும் பிறவாகனத்திலும்
நடந்துமுடிகிறது தினமும்!

இந்த மேல் நடை மடக்கியெழுதத்
தூண்டிய மெய்க்காட்சிகளிலுள்,
மறைந்து, தெளிந்து, தெரியும்,
வயிறுகளும் உழைப்புகளும்,
குருதியாய் சிதறித்தெளிக்க,
நாட்கள் உருளும், மீண்டும் மெய்!