Saturday 31 August, 2013

தேடலுடன்...

நித்திரைக்கு விடைகொடுக்க
நினைக்கும் பொழுதெல்லாம்
எனக்கு நன்றாக, தூக்கம் வருகிறது!

வணங்கி வணங்கி,
தலைசுளுக்குத்தான் மீதமானது;
இன்னும் விடியல் வரவில்லை!

கதிரவனே!
உன் சுடுவெளிச்சம் என்னுடலின் உப்புநீரை,
அதிகாரமாய் பிழிந்தாலும்,
என் நினைவுகளை மறியேன்!

நற்சுற்றமே!
நின் விட நகங்கள் என்னகத்தின் குருதிக்குளத்தை
கலந்துவிட்டு பிதுக்கினாலும்,
என் திடங்களை அழியேன்!

புதைந்த ஞானத்திற்கு,
இதோ என் அன்பளிப்பு!
தீர்க்கமாய் உள்ளகத்தில் வைத்துப் பராமரித்துக்கொள்ள,
இந்த நயமான நல்வாழ்க்கை!