பெரிய இவனோல நீயின்னு
கேட்டவுகள பாக்காம,
கங்கனங் கட்டி அந்தால
வீம்பா மொறச்சு நடந்தேன்!
வெளிச்சம் போன கருக்கல்ல,
சந்தைக்கு வந்து நின்னேன்,
பட்டெனத்துல கெடைக்கு மேண்ட்டு,
காசுசேத்துட்டு வந்தேன்!
மனசு நெறய ஆசையா,
பேரம்பேசி ஆளுக் கொன்னா,
பேத்தி பேரன் புள்ளங்களுக்கு,
பொம்மகுதிரயும் கலர் பென்சிலுமா,
எண்ணி எண்ணி பாத்த காச,
நீட்டி அவன்ட்ட குடுத்துபுட்டு,
நடைய கட்ட நெனைக்கும்போது,
கேட்டதுய்யா "டமார்...படார்"
கண்ணுக்கு ஒரே பொகமட்டும்,
காதுக்கு ஒரே கத்தல்மட்டும்னு,
எங்கெருக்கேன் ஒன்னும் தெரியல, அசச்சா
காலு நகட்ட ஒணரல!
தலயமட்டும் அசச்சுப் பாத்தா,
பலிபீடமா பூமி தெரியிதே?!
அய்யோ இந்த மனுசனெல்லாம்,
அலறி விழுரது வெளங்குதே?!
வேரென்ன செய்ய இப்போன்னு,
ஒருபக்கம் தோணுனாலும்!
ஒன்னும் புடுங்க முடியாதுன்னு,
மனசு என்னத் திங்குதய்யா!
போப்போரேன்னு தெரிஞ்சாலும்,
பாவிமனசு அடிக்குதய்யா!
தாத்தா தாத்தான்னு ஆசையா,
கூப்புடுதாப்போல கேக்குதய்யா!
உசிருக்கு சாயம்பூச முடியாம, இந்த
ஒடம்புக்கு சாயம்பூச நெனச்சுக்கிட்டு,
வந்துட்டாங்க மூதிமக்கான்னு மனசுகேக்குதே, அய்யா
ஒங்க ஆருக்கும் இந்தவலி கேக்கு..தா......?!