Tuesday 5 February, 2013

(பெருங்)காயம்


குழப்ப நிலையில், மனிதம் இறக்கும்;
தாயா? மகளா?, உருவம் தெறிக்கும்;
தெய்வ வாசல்தான் அமைதியோவென
பொய்த்த கனம்நினைத்து,
எனைத் துருவியெடுக்கும்?!

வந்தாய் நின்றாய் நடந்தாய்; சொற்கள்
உதிர்த்தாய் கோர்த்தாய் எறிந்தாய்; கற்கள்
மழையாய் ஈட்டியாய் சாட்டையாய்,
பொழியப் பொழிய!!...

நன்றி, நன்றி!
தோலும் எலும்பும் இம்மியேனும் கிழியாமல்;
இதயம் மட்டும் குதறப்பட்ட மாயம்தனை கற்பித்தமைக்கு!

உன் மெய்க்காதலனாய் இன்றி,  உண்மைக்காதலனாய்,  நன்றி!

No comments:

Post a Comment